ஆர்ப்பாட்டம் காரணமாக மூடப்பட்ட வீதிகள்

 


கொள்ளுப்பிட்டி, ப்ளவர் வீதி தற்காலிகமாக பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


சுகாதார ஊழியர்கள் குழு ஒன்று தற்போது பிரதமர் அலுவலகம் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணியாக சென்று கொண்டிருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, செத்தம் வீதியும் பொலிஸாரால் வீதித் தடைகளை பயன்படுத்தி மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுயதொழில் வியாபாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் காரணமாகவே அப்பகுதியில் வீதி மூடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post


Put your ad code here