Monday 6 June 2022

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் மிஷ்கின்?

SHARE

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். கொரோனா காலக்கட்டத்திற்கு பின்பு நெல்சன் இயக்கத்தில் ‘டாக்டர்’ மற்றும் அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ என அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களும் தற்போது 100 கோடி வசூலை செய்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படங்களை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில் தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. இந்த கதையில் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் கைடாக நடிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. இந்த திரைப்படம் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு அடுத்து தனது 22வது படத்தை சிவகார்த்திகேயன் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி சாய்பல்லவி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்து ‘மண்டேலா’ இயக்குநர் மடோன் அஸ்வினுடன் அடுத்த படத்தில் இணைகிறார்.

இந்த திரைப்படத்தில் தான் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிப்பதற்காக இயக்குநர் மிஷ்கினிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது. நடிகர் மிஷ்கின் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிப்பதன் மூலம் வரும் பணத்தை தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைப்பதாக கூறியிருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.
SHARE