யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினுள் அத்துமீறி நுழைந்த வெளியாட்கள் இருவர் அங்கிருந்த பல்கலைக்கழக மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய சமயம் மாணவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
யாழ். பல்கலைத்தில் தியாகி பொன். சிவகுமாரன் நினைவு தினம் நேற்று மாலை இடம்பெற்றது.
அதற்காக மாணவர்கள் அங்கு வருகை தந்திருந்தனர். அந்த நிகழ்வு முடிவுற்ற பின்னர் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நின்ற மாணவிகள் மீது வெளியில் இருந்து வந்த இருவர் திடீரென தாக்குதல் நடத்தினர்.
பின்னர் அங்கிருந்த ஆண் மாணவர் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டபோது ஏனைய மாணவர்கள் ஒன்றுசேர்ந்து அந்த இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அங்கு வந்த பொலிஸார் தாக்குதல் நடத்திய இருவரையும் கைது செய்தனர்.