
சுற்றுலாத் துறைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் தற்போது கடுமையான பேரழிவு நிலையை அடைந்துள்ளனர் எனவும், அவர்களுகளுக்கு வழங்கப்பட்ட கடன் நிவாரண கால எல்லை மீண்டும் நீடிக்கப்படாமையால் இலட்சக்கணக்கான மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இந்நாட்டின் செலாவனிக்கு வலு சேர்க்கும் சுற்றுலாத் துறையையும்,சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் துறையையும் முன்நோக்கிக் கொண்டு செல்வது அரசின் பொறுப்பாகும் என்றாலும்,தற்போது அது அவ்வாறு இடம் பெறுவதில்லை எனவும், பொது மக்களின் எண்ணப்பாடுகள் குறித்து அரசாங்கத்திற்கு எந்த புரிதலும் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று (03) பிற்பகல் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Tags:
sri lanka news