ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றிய பொருட்கள்..

 


பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இராணுவ வீரர் ஒருவரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் 2 மெகசின்கள் மற்றும் 60 தோட்டாக்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான முறைப்பாடு பொரளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post


Put your ad code here