
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (27) இடம்பெற்றுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடியதாக அமெரிக்க தூதர் தெரிவித்தார்.
மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்தும் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.
Tags:
sri lanka news