யாழில் சிக்கிய பூசணிக்காய் திருடன்..!!!






யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் பூசணிக்காயை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் 40 கிலோகிராம் பூசணிக்காய் களவாடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அது தொடர்பில் தோட்டக்காரரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதனடிப்படையில், வட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள மூளாய் பகுதியில் நபரொருவர் 40 கிலோகிராம் பூசணிக்காயை ஒரு கிலோகிராமுக்கு 70 ரூபாய் வீதம் விற்பனை செய்ததாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பூசணிக்காயை விற்ற நபரை பொலிஸார் கைது செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபரிடம் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here