வெளிநாடு செல்ல முயற்சித்தவர்கள் கைது..!!!




இலங்கை கடற்படையினர் மட்டக்களப்புக்கு அப்பால் கடலில் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சட்டவிரோதமாக கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களை கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்தனர் என சந்தேகிக்கப்படும் 85 பேரை கைது செய்துள்ளதுடன் அவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை ஆழ்கடல் மீன்பிடி படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

படகினை செலுத்திச் சென்றவர்களுடன் 18 வயதுக்கும் மேற்பட்ட வயதுடைய 60 ஆண்கள்,14 பெண்கள், 18வயதுக்கும் குறைந்த 11 சிறார்களுடன் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்காக அவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here