துப்பாக்கி உட்பட ஆயுதங்களுடன் புரண்ட ஊர்தி..!!!




ரி 56 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்கான தோட்டக்கள் உட்பட ஆயுத தொகையை ஏற்றிச் சென்ற பொலிஸ் சுமை ஊர்தி கண்டி -மஹியங்கனை வீதியில் 18வது வளைவு பாதையில் 11 வளைவின் அருகில் புரண்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது.கண்டி குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் பயிற்சி பொலிஸ் அதிகாரிகளின் பயிற்சிக்காக இந்த ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ள உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நடந்த போது சுமை ஊர்தியில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் பயணம் செய்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here