யாழ்ப்பாணம் வேலணைப் பகுதியில் நண்பனின் ஏரிஎம் அட்டையை திருடி மதுபானம் கொள்வனவு செய்தவரை 50 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையில் செல்ல ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது நண்பனின் ஏரிஎம் அட்டையை திருடி 30 ஆயிரம் ரூபாய்க்கு மதுபானங்களை கொள்வனவு செய்துள்ளார்.
அது தொடர்பில் ஏரிஎம் அட்டையின் உரிமையாளரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முற்படுத்திய போது , வழக்கினை விசாரணை செய்த நீதவான் சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார்.