Monday 26 September 2022

வெங்கட் பிரபு சொன்ன மாஸ் அப்டேட்!

SHARE


 இயக்குனர் வெங்கட் பிரபு எப்போது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் அவரிடம் ரசிகர்கள் கேட்கும் கேள்வி விஜய் மற்றும் அஜித் பற்றியது தான். அவர்கள் இருவரையும் இணைத்து எப்போது ஒரு படம் எடுக்க போகிறீர்கள் என்கிற கேள்வியை தான் எல்லோரும் கேட்டு வருகிறார்கள்.

அவரும் தவறாமல் அது பற்றி பேசிவிடுகிறார். சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட அவர் வழக்கம் போல மங்காத்தா 2 பற்றி பேசி இருக்கிறார்.எனக்கும் அவர்கள் இருவரையும் இணைத்து திரையில் காட்ட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அவர்கள் ஒன்றாக இருக்கும்போதே அதை அவர்களிடம் கூறி இருக்கிறேன். அவர்களுக்கும் ஆசை இருக்கிறது.

"அது எப்போது நிறைவேறும் என்பதற்காக நான் ஆசையுடன் காத்திருக்கிறேன். அவர்கள ஒப்புக்கொண்டால் பெருசா மங்காத்தா 2 எடுத்துவிடலாம்" என வெங்கட் பிரபு கூறி இருக்கிறார். 


SHARE