யாழில் போதைப்பொருளுடன் 15 வயது சிறுவன் உள்ளிட்ட 06 பேர் கைது..!!!


யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 15 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு நிஜாம் பாக்கு கொண்டு சென்ற மாணவனை பொலிஸார் கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here