Sunday 2 October 2022

பொன்னியின் செல்வன் படத்தோடு போட்டி போட்ட நானே வருவேன் படத்தின் நிலை..!!!

SHARE



தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவான நானே வருவேன் திரைப்படத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர். இவர்கள் கூட்டணியில் இதற்கு முன்பு வெளியான படங்கள் அமோக வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.மேலும் தனுஷின் கடைசி படமான திருசிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

இதைத்தொடர்ந்து நானே வருவேன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படம் பேய் படமாகவும், சைக்கோ திரில்லர் படமாகவும் இரு கதைக்களங்களில் வெளியானது.என்னதான் பொதுவான ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தனுஷ் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 29 ஆம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் வசூலை அள்ளியது.முதல் நாளில் மட்டும் இப்படம் 10 கோடி வரை வசூலானது. எந்த வித விளம்பரமும் இல்லாமல் இப்படம் இந்தளவிற்கு வசூலானது ரசிகர்களால் ஆச்சர்யமாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் முதல் நாளில் அமோகமான வசூலை பெற்ற இப்படம் இரண்டாவது நாளில் அறுபது சதவீதம் குறைந்து 4 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பொன்னியின் செல்வன் படத்தின் வெளியீடு தான். இந்திய சினிமாவே எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது.

அப்படம் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அந்த படம் வெளியானது முதல் ரசிகர்களின் பார்வை அனைத்தும் பொன்னியின் செல்வன் படத்தின் மீது திரும்பியது. அதன் காரணமாகவே நானே வருவேன் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
SHARE