யாழ்.போதனா வைத்தியசாலையில் 11 மாத குழந்தை உயிரிழப்பு..!!!



யாழ் போதனா வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 11 மாதங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளது.

காரைநகர் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் ஜீவிதா என்ற 11 மாத குழந்தைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீர் சுகவீனம் ஏற்பட்டமையால், காரைநகர் வலந்தலை வைத்திய சாலையில் பெற்றோர் அனுமதித்தனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.


Previous Post Next Post


Put your ad code here