இளவாலை பகுதி வீடுகளில் திருட்டுப்போன 14 இலட்சம் பெறுமதியான நகை பணம் மீட்பு..!!!
யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில் உள்ள வீடுகளில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவரிடமிருந்து 14 இலட்சம் பெறுமதியான நகை மற்றும் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளது.
இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று வீடுகளை உடைத்து இடம்பெற்ற திருட்டு சம்பவங்களிலேயே குறித்த நபர் வெள்ளிக்கிழமை(18) கைதுசெய்யப்பட்டார்.
மல்லாகம் நீதவான் நீதிமன்றில் சனிக்கிழமை(19) சந்தேகநபர் இளவாலை பொலிஸாரால் முற்படுத்தப்பட்ட நிலையில், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.