Tuesday 15 November 2022

யாழில் சரிந்து விழுந்த 200 வருட பழைமை வாய்ந்த மலைவேம்பு மரம்..!!!

SHARE

யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் சீரற்ற காலநிலையின் காரணமாக இருநூறு வருடங்கள் பழைமை வாய்ந்த மலைவேம்பு மரம் ஒன்று திங்கட்கிழமை (நவ. 14) இரவு 11 மணியளவில் சரிந்து விழுந்துள்ளது.


குறித்த மரம் வீதியின் குறுக்காக சரிந்து விழுந்ததில் முன்னால் இருந்த வீட்டு மதில் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் வீதியில் பயணிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக யாழ்ப்பாண மாநகர சபையினரால் கச்சேரி நல்லூர் பிரதான வீதியானது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதோடு விழுந்த மரத்தினை அகற்றும்  நடவடிக்கைகளை உரிய சம்பந்தப்பட்ட தரப்பினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில், 200 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்த மரத்தினை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் பாதுகாக்க தவறியமையினால் விழுந்துள்ளது.

இரவு 11 மணியளவில் இடம்பெற்றமையினால் வீதியில் யாரும் பயணிக்காத நிலையில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இதுவே பகல் வேளையிலோ அல்லது சன நடமாட்டம் நிறைந்த நேரத்தில் இடம்பெற்று இருந்தால் உயிர் சேதங்களும் ஏற்பட்டிருக்கும் என தெரிவித்தார்.
SHARE