Saturday 19 November 2022

கார்த்திகை மாதத்தில் அதிர்ஷ்ட பலன்களைப் பெறப்போகும் 3 ராசிகள் இவைதான்..!!!

SHARE

விருச்சிக ராசியில் தற்போது மூன்று கிரக சேர்க்கை ஏற்பட்டுள்ளது. புதன் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சூரியனுடன் இணைந்து இந்த மாதத்தின் பிற்பகுதிவரை விருச்சிக ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்கள்.

கார்த்திகை மாதத்தை ஜோதிட அடிப்படையில் விருச்சிக மாதம் என்று குறிப்பிடுவார்கள். சூரிய பகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் மாதம் இது. கடந்த மாதம் துலாம் ராசியில் நீசம் அடைந்து சஞ்சாரம் செய்த சூரியன் தற்போது தனது நட்புவீடான விருச்சிகத்தில் அடியெடுத்து வைத்திருப்பதால் பெரும்பாலான ராசிக்காரர்களுக்கு இது நன்மையாகவே அமையும். மேலும் விருச்சிக ராசியில் தற்போது மூன்று கிரக சேர்க்கை ஏற்பட்டுள்ளது. புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சூரியனுடன் இணைந்து இந்த மாதத்தின் பிற்பகுதிவரை விருச்சிக ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த கிரக மாற்றத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மைகள் அதிக அளவில் நடைபெறும்

“விருச்சிக மாதத்தின் தொடக்கத்தில் சூரியபகவான் விசாக நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அடி எடுத்துவைக்கிறார். டிசம்பர் 7-ம் தேதிவரை அந்த நட்சத்திரத்திலேயே சஞ்சாரம் செய்வார். அதன் பிறகு அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். சுக்கிரன் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். குருபகவான் மீனத்திலும் ராகு பகவான் மேஷத்திலும் கேது பகவான் துலாம் ராசியிலும் சனிபகவான் மகரராசியிலும் செவ்வாய் பகவான் ரிஷப ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார்கள். சந்திர பகவான் இரண்டரை நாள்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் சஞ்சாரம் செய்வார். இந்த கிரக நிலைகள் பல ராசிகளுக்கு நன்மைகளைச் செய்யும் என்றாலும் மூன்று ராசிகள் மிகுந்த நற்பலன்களைப் பெறப்போகிறார்கள்.

விருச்சிகராசி

இந்த மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அமோகமான மாதமாக இருக்கப்போகிறது. இதுவரை இருந்த கவலைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தீரும். சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய 3 கிரகங்களுமே உங்கள் ராசியிலேயே இருப்பதால் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகளும் பொறுப்புகளும் வழங்கப்படும். உங்கள் ஆரோக்கியமும் தோற்றப்பொலிவும் மேம்படும். பொருளாதார ரீதியாக இருந்த தடைகள் நீங்கும். சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகி வண்டி வாகனம் அல்லது ஆபரணச் சேர்க்கை நிகழ வாய்ப்புண்டு. நன்மைகள் அதிக அளவில் நடைபெறும் மாதமாக இந்த மாதம் விருச்சிகராசிக்காரர்களுக்கு அமையும்.

தனுசு ராசி

மூன்றுகிரக சேர்க்கை இந்த மாதம் தனுசு ராசிக்கு விரைய ஸ்தானமான விருச்சிகத்தில் ஏற்பட்டிருப்பதால் சிலருக்கு செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் அதற்குகேற்பப் பொருள் வரவும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு தனலாபம் உண்டு. புதிய முதலீடுகள் கிடைக்கும். அதிகரிகும் செலவுகளும் சுபச்செலவுகளாக இருக்கும். செவ்வாய 6-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் உங்களுக்கு நற்பலன்களையே தரும். ஆரோக்கியத்தில் இருந்த சின்னச் சின்னக் குறைபாடுகளும் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். நவம்பர் 28-ம் தேதி உங்கள் ராசிக்குள்ளேயே புதன் வந்துவிடுகிறார். டிசம்பர் 7-ம் தேதி பௌர்ணமி அன்று சுக்கிரனும் ராசிக்குள் வந்துவிடுகிறார். இது அற்புதமான பலன்களை தனுசுராசிக்காரர்களுக்குல் கொடுக்க இருக்கிறது. மொத்தத்தில் இந்த மாதம் மிகவும் பலன்கொடுக்கும் மாதமாக இருக்கும்.

ரிஷப ராசி

ரிஷபராசியைப் பொறுத்த அளவில் செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் வக்கிரமாக சஞ்சாரம் செய்கிறார். இந்த சஞ்சாரம் மிகுந்த நற்பலன்களைக் கொடுக்கும். 7-ம் இடத்தில் மூன்று கிரக சேர்க்கை ஏற்பட்டிருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில் வளர்ச்சி உண்டாகும். ராசிநாதன் சுக்கிரன் விருச்சிகத்தில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் புதிய சக்தி பிறக்கும். கொடுக்கும் பணிகளைச் செவ்வனே முடித்து நற்பெயர் பெறுவீர்கள்.

ஆரோக்கியத்தில் இருந்த பின்னடைவுகள் நீங்கும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். இந்த மாதத்தின் பிற்பகுதியில் ராசிநாதன் 8-ல் சென்று மறைந்துவிடுவதால் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. செலவுகளில் சிக்கனம் அவசியம். 11-ல் இருக்கும் குரு உங்களுக்கு யோக வாய்ப்புகளை அள்ளி வழங்குவார் என்பதால் மிக எளிதாக அனைத்தையும் சமாளிப்பீர்கள்.

SHARE