
யாழ் செம்மணி பகுதியிலுள்ள குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் நீரில் மூழ்கி காணாமல் போனநிலையில் இன்று (17) சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த குளத்தினை அண்மித்த பகுதியில் வசித்துவரும் இளைஞன் ஒருவரே தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவேளை இவ்வாறு காணாமல் போயிருந்தமை் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் குளத்தில் தேடுதல் நடாத்தி குறித்த இளைஞனை காணவில்லை. இந்த சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் கடற்படையின் உதவியுடன் நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது.