“பாலைநிலம்” ராஜா அரங்கில் வெளியீடு..!!!


யூட்.சுகி இயக்கத்தில் உருவான பாலைநிலம்  ஈழசினிமாவின் விசேட காட்சி இன்று (03.12.2022) மாலை 6.30 மணிக்கு யாழ் ராஜா தியேட்டரில் இடம்பெற்றது.

யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ்.மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன், வைத்திய கலாநிதி சிவன் சுதன், கல்விப் பணிப்பாளர் மு. இராதா கிருஷ்ணண், பேரா. ரகுராம், மற்றும் கலைஞர்களின் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான பாலைநிலம் திரைப்படத்தினை பார்வையிட அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் பங்குபற்றினார்கள்.

நாளை 04.12.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 தொடக்கம் மூன்று காட்சிகள் இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.தர்மினி
















Previous Post Next Post


Put your ad code here