யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து சேவைகள் ஆரம்பம்..!!!



யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவைகள் திங்கட்கிழமை (12) முதல் ஆரம்பமாகியது.

இதன்படி அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் சென்னைக்கு பலாலியில் இருந்து விமான சேவையை ஆரம்பித்தது.

வாரமொன்றுக்கு இந்த விமான சேவை நிறுவனத்தினால் நான்கு சேவைகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணியொருவர் 20 கிலோ வரை பொருட்களை விமானத்தில் எடுத்துச்செல்லமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பலாலி விமான நிலையப் பணிகள் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் மீண்டும் விமான சேவை ஆரம்பமாகியது.
Previous Post Next Post


Put your ad code here