மனைவியை கொலை செய்த கணவன் தலைமறைவு..!!!


குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கூரிய ஆயுதத்தால் மனைவியை தாக்கி மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்.

வாரியபொல, தம்பேலியத்த, பம்முனாகொடுவ பிரதேசத்தில் நேற்று (20) மாலை இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பேலியத்த, பம்முனாகொடுவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையை செய்த சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று (21) நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளதுடன், வாரிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here