இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை... !!!




2022 ஆம் ஆண்டில் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டத்தை நிறைவு செய்து மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் (22) முடிவடையும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாவது தவணையின் இரண்டாம் கட்டம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 02 ஆம் திகதி ஆரம்பமாகும் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here