Wednesday 25 January 2023

சிவனுக்கு காணிக்கையாக உயிருள்ள நண்டுகளை படைக்கும் பக்தர்கள்..!!!

SHARE

பெரும்பாலும் ஆலயங்களில் பணம், பொன், முடி, பழங்கள் என பல்வேறு விதமான பொருள்களை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்துவர்.

ஆனால் குஜராத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் உயிருள்ள நண்டை காணிக்கையாக படைக்கும் வினோத நிகழ்வு இடம்பெறும்.

குஜராத்தில் உள்ள சூரத்தில் ராம்நாத் கெலா மகாதேவ் சிவன் ஆலயம் உள்ளது. வருடம் தோறும் இங்குள்ளள சிவலிங்கத்திற்கு உயிருள்ள நண்டுகளை காணிக்கையாக செலுத்த பக்தர்கள் குவிகின்றனர். அந்த அபூர்வ சம்பவம் வியக்கவைக்கும் விதமாக உள்ளது.


SHARE