கேமா அறக்கட்டளையினால் 12 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - புதுக்குடியிருப்பு..!!!


புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த , பெற்றோரை இழந்த மற்றும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 12 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இராமச்சந்திரனின் நினைவு தினத்தினை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் கேமா அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நிதியுதவியின் கீழ், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ஊடாக மாணவர்களுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிபிடத்தக்கது.












Previous Post Next Post


Put your ad code here