Sunday 19 February 2023

ஏ -9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி உயிரிழப்பு : இருவர் படுகாயம்..!!!

SHARE


ஏ9 வீதி பூனாவ பகுதியில் 18 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக பூனாவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஏ9 வீதி பூனாவ பகுதியில் பயணித்த கார் ஒன்று வீதியின் குறுக்காக சென்ற நாய் ஒன்றுடன் விபத்துக்குள்ளாக முற்பட்ட நிலையில், சாரதி விபத்தை கட்டுப்படுத்தும் விதமாக வாகனத்தை செலுத்திய போது வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது கட்டுப்பாட்டையிழந்து மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் அப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், அவரது தாயார் மற்றும் கார் சாரதி ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

மரணமடைந்த சிறுமியின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து குறித்து பூனாவ பொலிசார் விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.
SHARE