புத்தூரில் விபத்து ; அச்சுவேலி இளைஞன் உயிரிழப்பு..!!!



வீதியின் குறுக்காக இரும்பு கூட்டினை கொண்டு சென்றவர்களுடன் மோதுண்ட மோட்டார் சைக்கிள் ஓட்டி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியை சேர்ந்த விஜயரத்தினமூர்த்தி டுவிசன் (வயது 20) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை அச்சுவேலியில் இருந்து தனது நண்பனுடன் கொடிகாமத்திற்கு சென்று விட்டு , சாவகச்சேரி - புத்தூர் வீதியூடாக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை ,வீதியின் குறுக்காக இரும்பு கூட்டினை கொண்டு சென்றவர்களுடன்
மோதுண்டு விபத்துக்குள்ளானர்கள்.

விபத்தில் காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் டுவிசன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here