பாதுகாப்பற்ற ரயில் கடவையில் சைக்கிளில் பாதையை கடக்க முற்பட்ட மாணவியை ரயில் பாதை திருத்தும் வாகனம் மோதியதில் மாணவி காயமடைந்து, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் வவுனியா - தாண்டிக்குளத்தில் இடம்பெற்றுள்ளது.
தாண்டிக்குளம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள ரயில் கடவையில் தினமும் 5,000க்கும் மேற்பட்டவர்கள் கடந்து செல்லும் நிலையில் கடவையில் சமிக்ஞை விளக்கு மாத்திரமே பொருத்தப்பட்டுள்ளது.
அந்த சமிக்ஞை விளக்கும் சீராக செயற்படாத நிலையில், இன்று (24) காலை பாடசாலை மாணவியொருவர் ரயில் கடவையை கடக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது, ரயில் வீதியைத் திருத்தும் வாகனம் மாணவியை மோதியதில் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த ரயில் நிலைய வாகனத்தை பொதுமக்கள் மறித்து வைத்திருந்த, நிலையில் பின்னர் சில மணிநேரத்தின் பின் அதனை விடுவித்தனர்.
Tags:
sri lanka news