QR இல்லாமல் பெற்றோல் அடிக்க கோரி நாவற்குழி எரிபொருள் நிரப்பு ஊழியர் மீது வாள் வெட்டு..!!!


யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று வியாழக்கிழமை(16) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் கியூஆர் குறியீடு இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காயங்களுக்குள்ளான ஊழியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here