Wednesday 22 March 2023

யாழில். தாய் பால் கொடுக்காததால் இரண்டு மாத குழந்தை உயிரிழப்பு..!!!

SHARE


மருதங்கேணி பகுதியில் தாய் பால் கொடுக்காததால், இரண்டு மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் தெரிவிக்கையில்,

மருதங்கேணி பகுதியில் அண்மையில் 2 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கப்படாதமையாலையே உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தாய் உள நோய்க்கு உள்ளானவர். தகப்பன் மதுவுக்கு அடிமையானவராக காணப்பட்டுள்ளார். இவ்வாறான சூழலில் குழந்தை பராமரிப்பு இன்றி உயிரிழந்துள்ளது என தெரிவித்தார்.


SHARE