வடக்கு உள்ளிட்ட 6 மாகாணங்களுக்கு புதிய ஆசிரியர்கள்..!!!




வடக்கு உள்ளிட்ட ஆறு மாகாணங்களில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இளங்கலை பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இந்த ஆண்டு (2023) ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு வரம்பிற்கு உட்பட்டு, அந்த மாகாணங்களில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இளங்கலை கல்வி பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும் கல்வி அமைச்சு கூறுகிறது.
Previous Post Next Post


Put your ad code here