மீண்டும் பிரதமராகிறாரா மஹிந்த ராஜபக்ச? வெளிவந்த தகவல்..!!!


மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி பிரதமராக பொறுப்பேற்பார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளதாக தென்னிலங்கை தமிழ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில், தற்போது வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி மே 8 ஆம் திகதி நாடு திரும்புகிறார்.அதன் பின்னர் பிரதமர் நியமனமும் அத்துடன் அமைச்சரவை மாற்றமும் இடம்பெறலாமென சொல்லப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த தகவலை ஆளுங்கட்சி பக்கம் உறுதி செய்ய முடியவில்லை.

மஹிந்த மீண்டும் பிரதமராவதை பெசில் மற்றும் நாமல் விரும்பவில்லை என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரே அதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து மேலும் அறிய முடிந்தது – என்றுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here