யாழில். மாவா பாக்குடன் பாடசாலை மாணவன் கைது..!!!



யாழ்.தீவகப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மாவா போதை பொருளுடன்  செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய நிலையில் மாவா போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக, ஊர்காவற்துறை பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் குறித்த மாணவனை கைது செய்த ஊர்காவற்துறைப் பொலிசார் நீதிமன்றத்தில் முற்படுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
Previous Post Next Post


Put your ad code here