யாழில். நிலவும் அதிக வெப்பத்தினால் முதியவர் உயிரிழப்பு..!!!



யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக முதியவர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் ஞானமூர்த்தி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டின் குளியலறையில் மயங்கிய நிலையில் காணப்பட்ட நபரை , வீட்டார் மீட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அதிக வெப்பம் காரணமாக குருதி ஓட்ட குறைவினால் மரணம் சம்பவித்துள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here