யாழில். தலையில் விறைப்பு ஏற்பட்டு சிறுமி உயிரிழப்பு..!!!



தலையில் விறைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த சிறுமியொருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் ஞாயிறுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - குருநகரை சேர்ந்த ஜேசுதாஸ் அனோஜினி (வயது 10) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

யாழ். சென் ஜேம்ஸ் மகளிர் கல்லூரியில் 5ம் ஆண்டில் கல்வி பயிலும் குறித்த சிறுமி வீட்டிலிருந்த போது கடந்த 21ம் திகதி மயங்கி விழுந்துள்ளார்.

அதனை அடுத்து பெற்றோரால் சிறுமி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here