கிளிநொச்சி, பளை பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து ; இளைஞர் உயிரிழப்பு..!!!



கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் நேற்று புதன்கிழமை (29) பிற்பகல் பளை நகர பகுதியில் இருந்து புலோப்பளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் புலோப்பளையில் இருந்து பளை நகரப்பகுதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் குணம் கணேசன் வயது 20 என்பவரே பலியாகியுள்ளார்.

குறித்த இளைஞன் பளை நகரம் பளையை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் பளை வைத்தியசாலை கொண்டு சென்று மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here