70 நாட்களை கடந்து சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு..!!!


70 நாட்களை கடந்த பிக்பாஸ் வீடு தற்போது முதல் தடவையாக சூடுபிடித்துள்ளது.

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த வாரம் பிக்பாஸ் பிரபலத்தின் மகளான ஜோவிகா விஜயகுமார் குறைவான வாக்குகளை பெற்று வெளியானார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டிகள் கொஞ்சம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.

வாரத்தின் முதல் நாளான இன்று போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பாக நாமினேஷன் இடம்பெறுகின்றது. இன்றைய தினம் போட்டியாளர்கள் மத்தியில் ஓபன் நாமினேஷன் இடம்பெற்றுள்ளது.

இதில் பூர்ணிமா, நிக்ஷன், விசித்திரா, தினேஷ் ஆகியோர் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்றைய தினம் கமல் போட்டியாளர்களை பார்த்து, “ என்டர்டைம் பண்ணுங்க.. வன்மத்தை கக்க வேண்டாம்” என உடைத்து பேசியிருந்தார்.

இதனை தொடர்ந்து இன்றைய தினம் போட்டியாளர்கள் மத்தியில் வன்மத்துடன் சேர்ந்த ஒரு சலசலப்பு தெரிகிறது.

இதே வேளை கூல் சுரேஷ், “ பிக்பாஸ் வீட்டில் மாத்திரம் இல்லை தமிழ் நாட்டில் இருக்க கூட தகுதியில்லை..” என போட்டியாளரை நாமினேட் செய்துள்ளார்.

அந்த போட்டியாளர் விசித்திராவா அல்லது வேறு யாருமா? என சரியாக தெரியவில்லை. அத்துடன் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ முடிவடைந்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here