யாழ்.இளைஞனுடன் நட்பாக பழகிய தென்னிலங்கை வாசி மோட்டார் சைக்கிளுடன் மாயம்..!!!


தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வேலைக்கு வந்த இளைஞன் ஒருவர் யாழ்ப்பாண இளைஞனுடன் நட்பாக பழகி மோட்டார் சைக்கிளை அபகரித்து சென்றுள்ளார்

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நெல்லியடி பகுதியில் உள்ள கடை ஒன்றில் தென்னிலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு நெல்லியடியை சேர்ந்த இளைஞனுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 13ஆம் திகதி சாப்பாடு வாங்கி வர என நெல்லியடி இளைஞனின் சுமார் 7 இலட்ச ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளை தென்னிலங்கை இளைஞன் வாங்கி சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் இளைஞன் திரும்பி வராதமையால் , தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ள முயற்சித்த போது தொலைபேசி இலக்கம் செயலிழந்து உள்ளது.

அதனை அடுத்து கடைக்கு சென்று விசாரித்த போதும் , இளைஞன் கடைக்கும் வரவில்லை. அதன் பின்னர் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை பறிகொடுத்த இளைஞன் முறைப்பாடு செய்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here