100 ஆண்டுகள் கழித்து மீனத்தில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..!!!


வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் பூமியிலும், மனித வாழ்க்கையிலும் தெரியும்.

அந்த வகையில் கிரகங்களின் தளபதியான செவ்வாய் ஏப்ரல் 23 ஆம் தேதி மீன ராசிக்கு செல்கிறார். இந்த மீன ராசியில் ஏற்கனவே ராகு, புதன், சுக்கிரன் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் செவ்வாயும் மீன ராசிக்கு செல்வதால், இந்த 4 கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகமானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் இந்த 4 கிரகங்களின் சேர்க்கையால் நிகழ்கிறது. இதனால் இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இப்போது மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்

கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். மேலும் பரம்பரை சொத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பணிபுரிபவர்களுககு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்றலாம். குடும்ப வாழ்கை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். சிலர் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.

மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீடடில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை இக்காலத்தில் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவு இக்காலத்தில் கிடைக்கும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புககள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்சசியாக இருககும்.
Previous Post Next Post


Put your ad code here