Friday 26 April 2024

100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..!!!

SHARE

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஏப்ரல் 13 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழைந்தார்.

அதைத் தொடர்ந்த ஏப்ரல் 24 ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்குள் நுழைந்தார். இவ்விரு கிரகங்களும் மேஷ ராசிக்குள் நுழைவதற்கு முன்னரே குரு பகவான் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இதனால் மேஷ ராசியில் குரு, சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது.

முக்கியமாக இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் உருவாகியுள்ள இந்த யோகம் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகிள்ளது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். முக்கியமாக தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.


மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சிலருக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வருமானத்தில் எதிர்பாராத அளவில் அதிகரிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

கடகம்

கடக ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக சில முக்கியமான முடிவுகளை இக்காலத்தில் எடுப்பீர்கள். நிதி நிலை வலுவடையும் வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெறலாம்.


மிதுனம்

மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படும். வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வெற்றியுடன், லாபத்தையும் பெறுவார்கள். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி மூலம் நிறைய லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது.
SHARE