Friday 12 April 2024

மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை :போலி நாணயத் தாள்களின் புழக்கம் அதிகரிப்பு..!!!

SHARE

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொலீசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் போலி நாணயத்தாள்களை மாற்றுவதற்கு நபர்கள் வரலாம் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி பொலீஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
 
மேலும் பண பரிவர்த்தனை செய்யும் போது பணத்தாளில் மாற்றம் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
SHARE