Saturday 27 April 2024

கிளிநொச்சியில் மிளகாய் தோட்டங்களுக்குள் புகுந்து விசமிகள் வெறியாட்டம்: நாசமான பல லட்சங்கள்..!!!

SHARE

கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில ் இயங்கிவரும் சட்டவிரோத குழுஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கியவாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று(25.04.2024) அழிக்கப்பட்டுள்ளது.

இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளை பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்தும், வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.

பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச்செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








SHARE