நீண்ட விடுமுறை முன்னிட்டு விசேட தபால் சேவை..!!!


அரச விடுமுறை தினமான எதிர்வரும் 12ஆம் திகதி, தபால் பொதிகளை விநியோகிப்பதற்கான விசேட சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தபால் மா அதிபர் டபிள்யூ.எம்.ஆர்.பி சத்குமார விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையில், வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் வசதியைக் கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அரச விடுமுறை தினமான எதிர்வரும் 12ஆம் திகதி நாடளாவிய ரீதியில் விநியோகப் பிரிவுகளைக் கொண்ட தபால் மற்றும் உப தபால் நிலையங்கள் மூலம் வெளிநாட்டுப் பொதிகள் சேவை மற்றும் பொதுப்பொதிகள் விநியோகம் தொடர்பான விசேட சேவையொன்றை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here