![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWtE_DlAX-ZPwI_NUpCqM6W-RFTHmCpYtbvS0T0gy3Rrq5TI-irqomubPmcUC5TmmCQ5WmFVjetIXJpVTXg5xR5Gl06rO8mNvVoqp_xbPGM18Qj6G2jWukq3wFCHCf6llB4Es1GZzjMVyB/w640-h360-rw/image_25ff5c198e.webp)
சிறுவயது காதலர்கள், நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட பின்னரும் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி பிறிதொரு இடத்தில் தங்கியிருந்த வேளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞனும் , 16 வயது சிறுமியும் காதலித்து வந்த நிலையில் கடந்த 06 மாத கால பகுதிக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி பிறிதொரு இடத்தில் தங்கியிருந்த வேளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
நீதிமன்ற விசாரணைகளை அடுத்து, இளைஞனுக்கு 3 மாத கால சிறைத்தண்டனை விதித்த மன்று , சிறுமியை சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்குமாறு கட்டளையிட்டது.
அந்நிலையில் இருவரது தண்டனை காலங்களும் நிறைவடைந்து தமது வீடுகளுக்கு திரும்பியவர்கள் , மீண்டும் இருவரும் தமது வீட்டை விட்டு வெளியேறி , யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் தங்கிருந்துள்ளனர்.
இது தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் இருவரையும் கைது செய்து , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்