யாழில் இளைஞர் உயிரிழப்பு..!!!


யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் வீட்டில் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் கோபிசன் வயது 28 என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

நேற்றைய தினம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் சமுத்தர தீர்த்தத்திருவிழாவுக்கு நண்பர்களுடன் சென்று விட்டு இரவு 10:00 மணியளவில் வீட்டுக்கு திரும்பிய நிலையில் இன்று காலை வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் .

சடலம் உடற்கூற்று சோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இளைஞனின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here