பொதுத் தேர்தலில் போட்டியிடும் யாழ். வேட்பாளர் அதிரடியாக கைது..!!!



நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஒருவர் நிதி மோசடியில் ஈடுபட்டமையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், குருநகரை சேர்ந்த குறித்த வேட்பாளர் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஒருவரை ஏமாற்றி 5லட்சம் ரூபா நிதி மோசடி செய்த நிலையில், யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here