தனது X தளப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்ட A .R . ரஹ்மான்..!!!


பிரபல இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ், ஹிந்தி உட்பட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஒஸ்கார் விருதும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், கணவர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். 29 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனுஷ், ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ் இவர்களுடைய விவாகரத்து வரிசையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்திருப்பது இரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதைத்தொடர்ந்து தனது X தளப் பக்கத்தில், 30 ஆம் ஆண்டு திருமண பந்தத்தை எட்டுவோம் என நம்பி இருந்ததாகவும், ஆனால், அனைத்தும் எதிர்பாராத முடிவுகளாகி விட்டது. உடைந்த இதயங்களின் எடையால் இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும்.

எனினும் இச்சிதறலில் உடைந்த துண்டுகள் தங்களுடைய இடத்தை மீண்டும் சேராமல் போனாலும், அர்த்தத்தை தேடி வருகிறோம். எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிப்பதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here