யாழ்ப்பாணம் - அராலி ஆவரம்பிட்டி ஶ்ரீ முத்துமாரி அம்பாள் கோவிலில் வெளியே அமைக்கப்பட்ட நீர் குழாய்களை விஷமிகள் சேதப்படுத்திய சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்காக பொருத்தப்பட்டிருந்த நீர் குழாய்களே ஆலயத்திற்கு அருகில் மது போதையில் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
அதற்கு அருகில் மதுபான போத்தல்களும் வீசப்பட்ட செயல் ஆலய பக்தர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான கேவலமான முறையில் செயற்படும் விஷமிகளுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.