அருச்சுனா எம்.பிக்கு பிணை..!!!


அநுராதபுரத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு அநுராதபுரம் நீதவான் பிணை வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில வைத்து, இன்றைய தினம் வியாழக்கிழமை அநுராதபுர பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை, இன்றைய தினமே அநுராதபுர நீதவான் நீதிமன்ற நீதவானுக்கு முன் முன்னிலைப்படுத்திய போது, நீதவான் தலா இரண்டு இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் செல்ல அனுமதித்தார்.
Previous Post Next Post


Put your ad code here