யாழ் யுவதியின் செயலால் மனமுடைந்த பிரான்ஸ் மாப்பிள்ளை..!!!


யாழில் .பிரான்ஸ் வாழ் புலம்பெயர் இளைஞன் ஒருவரை திருமணம் முடிந்த சில நாட்களில் திருமணப் பெண், வேறு ஒருவருடன் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பிரான்ஸ் இருந்து சென்ற மணமகனுக்கும் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் யுவதி ஒருவருக்கும் அண்மையில் யாழில் திருமணம் இடம்பெற்றது.

இந்நிலையில் திருமணம் முடிந்த சில நாளில் பதிவுத் திருமணம் இடம்பெற இருந்த நிலையில் ஏற்கனவே திருமணம் செய்த ஆண் ஒருவருடன் புது மணப்பெண் தலை மறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மணமகன் வீட்டார் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தால் பிரான்ஸ் மாப்பிள்ளை மனமுடைந்துள்ள நிலையில், பெருந்தொகை பணத்தையும் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post


Put your ad code here