யாழில். குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!



யாழ்ப்பாணம் உரும்பிராயில் தீக்காயங்களுக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளார்.உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த 45 வயதுடைய ஐயாத்துரை புலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி மகளும்,மனைவியும் வேலைக்குச் செல்ல முற்பட்டவேளை குறித்த குடும்பஸ்தர் தனக்குத் தானே பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

இந்நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.
Previous Post Next Post


Put your ad code here